எனக்கு என்ன தெரியும்னு எனக்கே தெரியாது. நான் சொல்றத யாருமே காது கொடுத்து கேட்கவும் மாற்றனுங்க. பொண்ணுங்க கிட்ட பேசுனா அதுங்க மொக்க போடறான்னு சொல்லிடுதுங்க , நம்ம நண்பர்கள் கிட்ட பேசுனா , அவனுங்க ரம்பம் னு சொல்லி ஓடிருனனுங்க. அம்மா அப்பா கிட்ட பேசுனா , போதும் விடுட்ரானு சொல்றாங்க.
நான் பேசுறத கேட்பார் இல்லையா னு மலை உச்சியில் இருந்து கத்துன போது தான் , இந்த ப்ளாக் யோசனை வந்துது.( ஹி ஹி )
ஏற்கனவே நான் இங்கிலீஷ் ப்ளாக் வச்சி அதுல இங்கிலீஷ் type அடிக்க தெரியாம கஷ்ட பட்டது போதும்.அதனாலதான் இந்த விபரீத முடிவு. ஆதலால் இந்த அற்ப பதர் இந்த ப்ளாகை கிறுக்க முடிவு பண்ணி இருக்கு. கிறுக்கல்கள் நன்றாக இருந்தால் படிங்க இல்லனா அசிங்கமா திட்ட மட்டும் செஞ்சிடாதிங்க. நான் ரொம்ப பாவம்.
இதோட என்னோட முதல் பதிவ முடிக்கலாம்னு இருகிறேன்.ரெண்டாவுது போஸ்ட் அடிபேனா னு பாக்கலாம்.